தமிழகம்

கிரில் சிக்கனில் லெக் பீஸ்-ஐ காணும்? பிரபல ஹோட்டலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்…

கோவை ஜிகேஎஸ் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோஃபர் எடிசன், தனக்கு பரிமாறப்பட்ட முழு பொரித்த கோழியில் லெக் பீஸ் இல்லை என நீதிமன்றபடிகளை ஏறியுள்ளார். இது குறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரில், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள மணிகண்டன் என்பவரால் நடத்தி வரும் பிரபல பிரியாணி கடைக்கு தனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றதாகவும் அப்போது அங்கே முழு பொரித்த கோழி (கிரில் சிக்கன்) ஒன்றும் தந்தூரி சிக்கன் ஒன்றும் ஆர்டர் செய்ததாகவும், இதில் அவருக்கு பரிமாறப்பட்ட கிரில் சிக்கனில் லெக் பீஸ் கொடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அப்புகாரில், “லெக் பீஸ் எங்கே என்று ஹோட்டல் ஊழியரை கேட்டபோது அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் எனது  குடும்பத்தினர் முன்னிலையிலேயே ஆவேசமாக பேசி என்னை மிரட்டினார்கள். இதனால் எனக்கு அவமானம் ஏற்பட்டது. மேற்கொண்டு வற்புறுத்தியதை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் சமையலறைக்குச் சென்று மிகவும் தாமதமாக லெக் பீஸை கொண்டு வந்தார். 

நான் முழு கோழிக்கு பணம் கொடுத்திருந்தும் அவர்கள் லெக் பீஸை கொடுக்கவில்லை. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். எனவே எனது பில் தொகையான ரூ.1,196-ஐ தனக்கு வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கான இழப்பீடும் வழங்க ஹோட்டல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் நீதிமன்றம், ஹோட்டல் உரிமையாளர் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் செலவாக ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.