Categories: தமிழகம்

வனத்துறை வைத்த கூண்டில் வசமாக சிக்கிய சிறுத்தை : அச்சத்தில் இருந்த கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு!!

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் புகும் சிறுத்தைகள் அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடி கடந்த சில நாட்களாக கிராமவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனத்துறையினர் புதுப்பீர்கடவு கிராமத்தில் குப்புசாமி என்பவரது தோட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து அதில் ஆடு ஒன்றைக் கட்டி வைத்து கண்காணித்து வந்தனர்.

இன்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கி இருப்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது. அதனை வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்து அதனை தற்பொழுது காராச்சிகொரை கிராமத்தில் உள்ள வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பிடிபட்ட சிறுத்தையை இன்று இரவு நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா கிராமத்தை ஒட்டியுள்ள மங்களப்பட்டி என்ற அடர்ந்த வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர். பிடிபட்ட சிறுத்தைக்கு ஐந்து வயது இருக்கும் எனவும் அது ஆண் சிறுத்தை எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கி இருப்பது புதுப்பீர்கடவு, காராச்சிகொரை கிராம மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.