Categories: தமிழகம்

இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!!

இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார்கள் தொடர்ந்து நடந்து வந்த வண்ணம் உள்ளது.
அதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்கும் விதமாக தனிப்படை
அமைத்து கூடுவாஞ்சேரி போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார்
ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஊரப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும் படியான முறையில் மூன்று நபர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மகேஷ் (20), லிங்கேஸ்வரன்(21), சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் வசித்து வரும் ஸ்டீபன் ராஜ் (22) என்பது தெரியவந்தது.

இவர்கள் சென்னையில் இருந்து இப்பகுதிக்கு வந்து சாலையில் தனியாக செல்லும், பெண்கள் மற்றும் தனி நபர்களை குறி வைத்து, பணம், நகை,
செல்போன் என தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதனடிப்படையில் அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
அந்த மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

மேலும், அந்த மூன்று நபர்களை விடுவிக்க கோரி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திருநங்கை ஒருவர் தனது உள்ளாடைகளை அவிழ்த்து காவல் நிலைய வாசலில் தூக்கி விசி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தங்களது கைகளை தட்டி கத்தி கூச்சலிட்டதால் காவல் நிலைய வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.