திருவள்ளூர் : பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதிக்கு சுற்றுலாவிற்காக வந்திருந்த அம்பத்தூர் பாடி பகுதியைச் சேர்ந்த கதிரவன், செல்வராஜ் இருவரும் பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்ற போது
கடலும் எரியும் இணையும் முகத்துவாரம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் போலீசார் இருவரையும் மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை உடல்களை அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழவேற்காடு சுற்றுலா பகுதியில் படகு சவாரி தடை செய்யப்பட்ட நிலையில், அடிக்கடி இதுபோன்று படகில் சட்டவிரோதமாக பயணம் செய்து முகத்துவாரம் பகுதியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. மாவட்ட நிர்வாகம் காவல்துறை உயிரிழப்புகளை தடுக்க உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.