மதுரை : அரசரடி பகுதியில் மதுரை சிறையில் இருந்து ஆயுள்கைதி தப்பியோடிய நிலையில், காவலரை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த ஆதி என்ற அருண்குமாா் (49). இவா் ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2021 அக்டோபா் 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது.
இதையடுத்து, மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமாா், அங்கு தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். இதில் சிறை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றதால் சிறையின் வெளிப்புறம் உள்ள பகுதிகளில் அருண்குமாரை தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தி வந்துள்ளனா்.
இந்நிலையில், நேற்று சிறையின் வெளிப்புற வளாகத்தில் உள்ள தோட்டத்தில் அருண்குமாா் வேலை பாா்த்துகொண்டிருந்தபோது, திடீரென அருண்குமாா் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானாா்.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடா்பாக சிறைக்காவலா் பழனிகுமாா் மீது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.