தமிழகம்

ஆயுள் கைதிக்கு சிறையில் சித்ரவதை.. வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிரடி ரெய்டு..!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக இருந்தார். இவரது தாய் கலாவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதில் ஆயுள் கைதியான தனது மகனை சட்டவிரோதமாக வேலூர் சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு பணி அமைத்ததாகும். அங்கு நகை பணம் காணாமல் போன நிலையில் தனது மகன் எடுத்ததாக கூறி தனியாக சிறையில் வைத்து சித்திரவதை செய்ததாக புகார் அளித்திருந்தார்

இதனை அடுத்து இந்த புகார் குறித்து வேலூர் சிறைத்துறை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டிருந்தது நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கை அடிப்படையில் சிபிசிஐடி எஸ் பி வினோத் சாந்தாரா தலைமையிலான போலீசார் சிறை அதிகாரிகள் அத்துமீறல் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக பாதுகாப்பு அடிப்படையில் சிவகுமார் சேலம் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர் தனக்கு நேர்ந்த கொடுமையை சிவக்குமார் விரிவான வாக்குமூலம் அளித்ததின் அடிப்படையில்
வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் கூடுதல் எஸ் பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள்குமரன் உட்பட 14 பேர் மீது ஐந்து பிரிவினில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மாதத்திற்கு மேலாக சிவகுமாருக்கு இந்த கொடுமை நடந்துள்ளது என்பது முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில் ஆயுள் கைதி சிவகுமார் பணி அமைக்கப்பட்ட நிலையில் ஐந்து லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகை திருடு போனதாகவும் அதனை சிவகுமார் திருடி இருக்கலாம் என்று சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி கூறியதன் அடிப்படையில் சிறைத்துறை கூடுதல் எஸ் பி ஜெயிலர் மற்றும் சிறை துறையினர் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

வேலூர் மத்திய சிறையிலும் டிஐஜி பங்களாவிலும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாகவும் அது சம்பந்தமாக அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தது .

ஆயுள் கைதி சிவகுமார் 84 நாட்கள் தனிமை சிறையில் அடைக்கப்பட்டதும் 14 நாட்கள் மூடப்பட்ட இருட்டு அறையில் மிகக் கொடுமையாக தாக்கப்பட்டதும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

13 minutes ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

57 minutes ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

1 hour ago

அண்ணாமலை, சீமான் ஓட்டு கேட்டு வந்தால் செ**பை கொண்டு அடிங்க.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…

1 hour ago

ஒரு வழியா கட்டிடத்தை நிமித்திட்டாங்கப்பா- தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட வீடியோ! விஷால் ஹேப்பி அண்ணாச்சி…

பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…

2 hours ago

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

18 hours ago

This website uses cookies.