Categories: தமிழகம்

வேலூர் இளம்பெண் கூட்டு பாலியல் வழக்கு: 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை …மகிளா நீதிமன்றம் தீர்ப்பு..!!

வேலூர்: 2020ம் ஆண்டு வேலூர் கோட்டை பூங்காவில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று மகிளா நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2020ம் ஆண்டு வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

இளம்பெண்ணும், அதே கடையில் பணிபுரிந்த காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். காதல்ஜோடியினர் ஜனவரி மாதம் 18ம் தேதி ஜவுளிக்கடையில் வேலை முடிந்த பின்னர் இரவில் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

இரவுநேரத்தில் காதல்ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 2 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை பறித்தனர்.

தொடர்ந்து 2-பேரும் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்கள். 2பேரும் குற்றவாளிகள் இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் பூங்காவை ஒட்டியுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், வேலூர் கஸ்பாவை சேர்ந்த அட மணி(எ) மணிகண்டன் (வயது 41), வசந்தபுரத்தை சேர்ந்த சக்திவேல் (எ) கோழியும்(21), இளம்பெண் அணிந்த கம்மல் மற்றும் செல்போன்களை வாங்கி விற்ற தொரப்படியை சேர்ந்த கொய்யா(எ) மாரிமுத்து (31) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மணிகண்டன், சக்தி, மாரிமுத்து ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்ளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் A1, அட மணி(எ)மணிகன்டனுக்கும்,A2 சக்திவேல்(எ)கோழி க்கும் 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து 26 ஆயிரம் அபராதமும், பொருளை வாங்கி விற்ற கொய்யா(எ) A3 மாரிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பு வழங்கினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

22 minutes ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

44 minutes ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

2 hours ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

2 hours ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

2 hours ago

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

18 hours ago

This website uses cookies.