கொடுங்கையூர் பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொடுங்கையூர், எழில் நகர், 4வது தெருவில் உள்ள ஓரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்படி வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ரோசி, (வயது 52) அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 30 மதுபாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.000/- பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் ரோசி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…
ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…
ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…
This website uses cookies.