புத்தகம் தூக்க வேண்டிய கையில் புட்டி : பள்ளிச் சீருடையில் மது வாங்கும் மாணவர்கள்.. ஷாக் காட்சி!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு டாஸ்மாக் மதுபான கடையில் பள்ளி சீருடை உடன் இரண்டு சிறுவர்கள் மது பாட்டில் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்ல முற்பட்டனர்
அப்போது அங்கே மது அருந்தி கொண்டிருந்த மது பிரியர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்து பள்ளி மாணவர்களை தடுத்து நிறுத்தி பள்ளி சீருடை உடன் மது வங்கி செல்கிறீர்களே என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினர் 21 வயது நிரம்பாத சிறார்கள் மது அருந்தக்கூடாது என்று அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அந்த பள்ளி மாணவர்கள் தனது தாத்தாவிற்கு சரக்கு வாங்கி செல்வதாகவும், அவர்தான் எங்களை கட்டாயப்படுத்தி மதுபானம் வாங்கி வர அனுப்பினார் எனவும் அவர்களிடம் கூறினர்.
இதைக் கேட்ட மது பிரியர்கள் சிறுவர்கள் கூறுவது உண்மைதான் என நினைத்து அவர்களை இருசக்கர வாகனத்தில் செல்கிறீர்கள் மெதுவாக செல்லுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தைக் வேக வேகமாக எடுத்துக் கொண்டு தப்பி ஓடினால் போதும் என்று நினைத்து தெரிந்து ஓடினர்.
தற்போது இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.