சேலம் ; ஆத்தூர் அருகே டாஸ்மாக் மதுபான கடையில் ௯டுதல் விலைக்கு 10 ரூபாய் வாங்கியதாக மதுப்பிரியரியர்களுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் இரயிலடி தெருவில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக மிகப்பெரிய அளவில் சரச்சை ஏற்பட்டு, அது பரபரப்பாகி வந்தது.
அது தற்போது சற்று ஓய்ந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் இரயிலடி தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றிய ஊழியர் மதுப்பிரியர்களிடம் MRPவிலையை விட ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகவும், மதுபிரியர் வாங்கிய மதுபாட்டில் இரண்டிற்கும் 30 கூடுதலாக பணம் வாங்கியுள்ளார். இதனால் எதற்காக ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய், மற்றொரு பாட்டிலுக்கு 20 ரூபாய் என 30 ரூபாய், MRP விலையை விட கூடுதலாக வாங்குகிறீர்கள் என கேட்டுள்ளார்.
அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியர் மற்றும் மதுப்பிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த ஊழியர், மதுப்பிரியர் பேசுவதை தனது மொபைல் போனில் படம் எடுத்ததால், ஊழியிருக்கும் மது பிரியருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் முப்பது ரூபாய் கூடுதலாக எதற்கு எடுத்தீர்கள் என கேட்ட மது பிரியரிடம், மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு மது பிரியர் கொடுத்த 500 ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டு, மது பாட்டில் உங்களுக்கு வழங்க முடியாது, எனவும் தெரிவித்துள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த மது பிரியர் மற்றும் மது வாங்க நின்றிருந்தவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சர்ச்சை ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
This website uses cookies.