Categories: தமிழகம்

திருநங்கையை திருமணம் செய்வதாக கூறி 2 வருடமாக LIVING TOGETHER : எஸ்கேப் ஆன இளைஞர்.. தாலியுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 2 வருடமாக லிவிங்-டூ கெதர் வாழ்க்கை திருமணம் செய்ய வலியுறுத்தியபோது எஸ்கேப் ஆன கணவர் வீட்டின் தர்ணாவில் ஈடுபட்ட திருநங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி, இவரும் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (எ) விவேக் என்ற வாலிபரும் ஒன்றாக கோவில் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இருவரும் இரண்டு வருடமாக லிவிங்-டூ- கெதர் முறையில் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தங்கதுரை தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த திருநங்கை ஸ்ரீநிதி தங்கதுரை வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தங்கதுரைக்கும் மற்றொரு பெண்னுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று அப்பெண்ணுடன் வாழ்ந்து வருவது திருநங்கை ஸ்ரீநிதிக்கு தெரியவந்தது.

இதனையடுத்து செய்வதறியாது தவித்த திருநங்கை மதுரை எஸ்.பி.சிவபிரசாத்திடம் கணவரை சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார். எஸ்.பி.பாலமேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.

போலீசார் உரிய விசாரணை நடத்தாததால், கணவரை மீட்டு தருமாறு வாலிபர் தங்கதுரை வீட்டின் முன் தாலி கயிறுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனடியாக சம்பவம் அறிந்த சோழவந்தான் போலீசார் திருநங்கை ஸ்ரீநிதியை அழைத்து இரு நாட்களில் வாலிபரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தி சேர்த்து வைப்பதாக ஆறுதல் கூறியதால் திருநங்கை அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

35 minutes ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

36 minutes ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

54 minutes ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

1 hour ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

17 hours ago

This website uses cookies.