திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 2 வருடமாக லிவிங்-டூ கெதர் வாழ்க்கை திருமணம் செய்ய வலியுறுத்தியபோது எஸ்கேப் ஆன கணவர் வீட்டின் தர்ணாவில் ஈடுபட்ட திருநங்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழச்சின்னனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரீநிதி, இவரும் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் பகுதியை சேர்ந்த தங்கதுரை (எ) விவேக் என்ற வாலிபரும் ஒன்றாக கோவில் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இதில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் இரண்டு வருடமாக லிவிங்-டூ- கெதர் முறையில் ஒன்றாக ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் திடீரென தங்கதுரை தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த திருநங்கை ஸ்ரீநிதி தங்கதுரை வீட்டுக்கு சென்று விசாரித்தபோது தங்கதுரைக்கும் மற்றொரு பெண்னுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று அப்பெண்ணுடன் வாழ்ந்து வருவது திருநங்கை ஸ்ரீநிதிக்கு தெரியவந்தது.
இதனையடுத்து செய்வதறியாது தவித்த திருநங்கை மதுரை எஸ்.பி.சிவபிரசாத்திடம் கணவரை சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார். எஸ்.பி.பாலமேடு காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரை விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
போலீசார் உரிய விசாரணை நடத்தாததால், கணவரை மீட்டு தருமாறு வாலிபர் தங்கதுரை வீட்டின் முன் தாலி கயிறுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
உடனடியாக சம்பவம் அறிந்த சோழவந்தான் போலீசார் திருநங்கை ஸ்ரீநிதியை அழைத்து இரு நாட்களில் வாலிபரை காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தி சேர்த்து வைப்பதாக ஆறுதல் கூறியதால் திருநங்கை அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.