தமிழகம்

அரசுப் பள்ளி மதிய உணவில் பல்லி.. வாந்தி, மயக்கத்தால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

தருமபுரி, அரூர் அரசுப் பள்ளியில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில், மாணவிகள் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, இதனை முதலில் சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.

எனவே, அவர்கள் உடனடியாக அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் ஒரு மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இது தொடர்பாக விசாரணை செய்ததில், பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அறிந்த வருவாய் கோட்டாட்சியர் சின்னுசுவாமி, வருவாய் ஆய்வாளர் சக்தி பிரியா மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறிய அவர்கள், மருத்துவர்களிடம் மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், பள்ளிக்குச் சென்ற வருவாய் கோட்டாட்சியர், அங்கு பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனை வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை.. சிவகங்கையில் பதற்றம்!

அது மட்டுமல்லாமல், இன்று வழங்கப்பட்ட மதிய உணவின் மாதிரியை எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் சின்னுசுவாமி கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

12 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

33 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

48 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

56 minutes ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.