கோவை: மத்திய அரசின் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் கிடங்கில் பணியாற்றிவரும் பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, இ.எஸ் ஐ உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தின் கிடங்கு பீளமேட்டில் கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இங்கு தற்போது, இருந்த 25 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து ஓய்வு பெற்றவர்களுக்கும், நிறுவனத்தில் நடந்த விபத்தின் காரணமாக வேலை செய்ய முடியாதவர்களுக்கும் எவ்விதமாக இழப்பீடும் வழங்க வில்லை.
மேலும் 30 ஆண்டுகள் வேலை செய்த பின்பும் முறையான ஊதிய விகிதமும், ஊதிய உயர்வும் அமலாக்கப்படவில்லை. இ.எஸ்.ஐ., பி.எஃப் அமல்படுத்தவில்லை. கழிவறை, ஓய்வறை குடிநீர், சீருடை என்ற எந்த வசதிகளும் இல்லை. கொத்தடிமைகள் போல் கடந்த 30 ஆண்டுகளாக உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள் எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
This website uses cookies.