தமிழகம்

ஸ்டாலின் ஆட்சியில் லாக்கப் மரணம் குவாட்டர் செஞ்சுரி போட்டுள்ளது : ஹெச் ராஜா விமர்சனம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய காவலர் அஜித் குமார், 10 பவுன் நகை திருடு போன வழக்கில் காவல்துறையின் விசாரணையின் போது உயிரிழந்தாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திருப்புவனம் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆறு பேர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்ற அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையும் படியுங்க: தோல்வி பயத்தால் திமுகவினர் பைத்தியம் பிடித்து திரிகின்றனர் : எல்.முருகன் காட்டம்!

பின்னர் செய்தியாளரை சந்தித்தபோது, காவல்துறையினர் அத்துமீறியதால் அஜித்குமார் மரணமடைந்ததாக குற்றம் சாட்டினர். மேலும் உயிரிழந்த 24 மணி நேரத்தில் உடற்கூறு ஆய்வு செய்யப்படவில்லை.

ஸ்டாலின் ஆட்சியில் லாக்கப் டெத் குவாட்டர் செஞ்சுரி போட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு நேரில் சென்ற ஸ்டாலின், இன்று அஜித்குமார் இறப்பிற்கு ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காவல்துறை கொலை துறையாக மாறி உள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆறு காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

அஜித்குமார் மரணத்திற்கு ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எச். ராஜா தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…

2 hours ago

அஜித் மீது புகார் கொடுத்த நிகிதாவை கைது செய்யுங்க.. பின்னாடி உள்ள ஐஏஎஸ் அதிகாரி யார்?

திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…

2 hours ago

கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!

சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…

3 hours ago

விஜய் செய்த அரசியல் ஸ்டண்ட்… முதலமைச்சர் முன்னால் எடுபடாது : அமைச்சர் விமர்சனம்!

புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தனது வாழ்வுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று ஒன்றிணைவோம் தமிழ்நாடு…

3 hours ago

வேறு மாதிரி என்றால் எந்த மாதிரி? திருப்புவனம் அஜித் மாதிரியா? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர்…

4 hours ago

This website uses cookies.