சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் கோவை – மைசூர் சாலையில் காலை 6 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றன.
தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம் திம்பம் மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்தை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்ட பிறகு அறிக்கை தாக்கல் செய்ய , சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மேலும், திம்பம் மலைப்பகுதியில் பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வனவிலங்குகளின் பாதுகாப்பு காரணமாக மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பகுதி யை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக திம்பம் மலைப்பகுதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன .
இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் கோவை – மைசூர் சாலையில், காலை 6 மணி முதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு நேற்று இரவு அமலான நிலையில், இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு நேர வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.