நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆத்தூர் சாலையில் இருந்து மெட்டாலா பகுதியில் இருந்து லாரி ஆனது ராசிபுரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள டீக் கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.
இதையும் படியுங்க: 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!
விபத்தில் கடையில் இருந்த குழந்தை உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் விபத்து அடைந்த லாரியிலிருந்து டீசல் கசிவு ஏற்பட்டு வருவதால் சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் தப்பி சென்ற நிலையில் விபத்து தொடர்பாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் நாளை தீமிதி திருவிழாவானது மாலை நடைபெற உள்ள நிலையில் தற்போது விபத்து நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
This website uses cookies.