அசுர வேகத்தில் வந்த லாரி… இருசக்கர வாகனத்தை தூக்கிய வீசிய சம்பவம் : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 7:58 pm
Quick Share

ராமநாதபுரம் சாயல்குடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஓரிவயல் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி, சோமசுந்தரம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மாரியூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மேலச்செல்வனூர் கிராமத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னோக்கி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கருப்புசாமி, சோமசுந்தரம் ஆகிய இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்து, கடலாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 368

0

0