திண்டுக்கல் சித்தையன்கோட்டை அருகே தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுனர் பரிதாபமாக பலியானார்.
சென்னையில் இருந்து தனியார் சொகுசுப் பேருந்து சுமார் 40 பயணிகளுடன் கம்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை கம்பம் அனுமந்த பட்டியைச் சேர்ந்த ஓட்டுனர் மணி என்பவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.
அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து தனியார் லாரியில் செங்கலை ஏற்றி கொண்டு ஓட்டுநர் மாடசாமி என்பவர் கோவையை நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார்
இந்நிலையில் இன்று காலை ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் சித்தையன் கோட்டை போடிகாமன்வாடி அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது.
பேருந்தக்குள் லாரி புகுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த டிரைவர் உட்பட சுமார் 10 பேர் படுகாயம் அடைந்தனர் தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
லாரி டிரைவர் மாடசாமி இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடியும் லாரி டிரைவரை உயிருடன் மீட்க முடியவில்லை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்
மேலும் பேருந்தில் பயணம் செய்த தேனி மற்றும் பெரியகுளம் கம்பம் பகுதிகளை சேர்ந்த சுமார் பத்து பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுனர் மணி மற்றும் மற்றோரு ஓட்டுனர் சிவகுமார், நந்தினி, ரபிக் கிறிஸ்டோபர், சண்முகவள்ளி சுரேந்திரன், பரமசிவம், முத்துமணி உட்பட சுமார் 10 பேர் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.