கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நக்க்ஷத்திரா. இவர் கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இதையும் படியுங்க: வாய திறந்தால் கெட்ட வார்த்தை…மேடை நாகரீகம் தெரியாதா…மிஷ்கினை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்கள்..!
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்துவரும் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாள் அடைவில் அது காதலாக மாறியது.
இந்நிலையில் இவர்களது காதல் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது. இதை அடுத்து இந்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அந்த இளம் பெண் நக்க்ஷத்திராவிற்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வந்த நிலையில், கடந்த மாதம் முதல் அந்த இளம்பெண்ணை வீட்டில் வெளியே அனுப்பாமல் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண் கிருஷ்ணமூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு வேண்டி தஞ்சம் அடைந்தார்.
மேலும் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவரது கல்லூரி சான்றிதழ்கள் அவர்களிடம் உள்ளதால் கல்லூரி படிப்பை தொடர அதைப் பெற்றுத் தர வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.