காதல் திருமணம்.. 5 மாதங்களில் இளம் பெண் தற்கொலை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் மனோஜ். இவர் திருவாரூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடவாசல் அருகே புதுக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சிராளன் என்பவரது மகள் சசி பிரியாவும் மனோஜின் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மனோஜ் வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் மனோஜ் வழக்கம் போல ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டின் அறையில் சத்தம் கேட்டதை அறிந்த மனோஜின் பெற்றோர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது சசிபிரியா மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மேலும் சுகப்பிரியா பெற்றோர்கள் நன்னிலம் காவல் நிலையத்தில் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.