திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமூக வலைதள செயலி மூலம், இளம்பெண்ணிடம் நட்பை ஏற்படுத்தி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்த நடன பள்ளி ஆசிரியரை போலீசார் கைது.
சென்னை மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோதா (வயது 28) என்ற இளம்பெண்ணுக்கு
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபு(வயது 32) என்ற நடனப்பள்ளி ஆசிரியருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி தனது சொகுசு காரில் வினோதாவை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்து இதுகுறித்து கேட்டபோது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டு தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக பாதிக்கப்பட்ட வினோதா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் நடன ஆசிரியர் பிரபுவை கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தம்பி பிரபுவின் நடனப் பள்ளியில் படித்த போது சமூகவலைத்தளம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததும் பிரபுவின் தாய் அவருக்கு உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.