Categories: தமிழகம்

ஒரே வங்கியில் பணிபுரிந்து போது லவ்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்.. வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் விவகாரம்!!

ஒரே வங்கியில் பணிபுரிந்து போது லவ்.. பெண் கொலையில் பரபரப்பு திருப்பம்.. வெளிச்சத்திற்கு வந்த கள்ளக்காதல் விவகாரம்!!

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் ஆண் சடலம் ஒன்று சாலையில் தலை நசுங்கி கிடப்பதாக கிளியனூர் காவல் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்றை திறந்து பார்த்தனர்.

அப்போது பெண் ஒருவர் காரின் உள்ளே கழுத்தில் குத்துப்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து இருப்பதை கண்ட போலீசார் இருவருது உடலையும் மீட்டு புதுச்சேரி கணகசெட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை சேகரத்தினர்.

முன்னதாக இருவரும் வைத்திருந்த வாகன ஒட்டுனர் உரிமம் மற்றும் அவர்கள் பணி புரிந்து வந்த தனியார் வங்கியின் (karur vysya bank) அடையாள அட்டைகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (37). இவருக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் என புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வந்த இவர் கரூர் வைசியா வங்கியின் மரக்காணம் கிளை மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார்.

அதே போல இறந்த பெண் மதுரா பாஃண்டிஸ் (34), அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கரூர் வைசியா வங்கி கிளையின் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வங்கியில் ஒன்றாக பணி புரிந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் கோபிநாதின் மனைவிக்கு தெரியவர அவர் கோபியை கண்டித்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று மாலை கோபிநாதும், மாதுராவும் புதுச்சேரி திண்டிவனம் சாலை கிளியனூர் பகுதிக்கு காரில் வந்ததில் மதுரா திருப்புலியால் (screw driver) கழுத்தில் குத்தப்பட்டு இரத்த வெளத்தில் உயிரழந்திருப்பதும், கோபி கார் அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தால் தலை நசுங்கி உயிரிழந்திருப்பதும் போலீசார்க்கு முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,

மேலும் மதுராவை கோபி திருப்புலியால் குத்தி கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர்களுக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடைபெற்றதில் மதுரா தன்னை தானே திருப்புலியால் குத்தி கொண்டதை பார்த்து அச்சம் அடைந்த கோபி சாலையில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த கள்ள காதல் விவகாரத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அவர்கள் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரு பிச்சைக்காரனால அரசாங்கமே ரிஸ்க்ல இருக்கு- தனுஷின் “குபேரா” படத்தின் கதை இதுதானா?

வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…

3 minutes ago

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

This website uses cookies.