நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய், 22. இவர் மனைவி அர்ச்சனா, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து கடந்த ஜூன் 28ல் திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணத்துக்கு அர்ச்சனாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அர்ச்சனா, அப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள பட்டு சென்டருக்கு தினமும் வேலைக்கு சென்று வந்தார். விஜய் தினமும் பைக்கில் மனைவியை வேலைக்கு அழைத்து சென்று வந்தார்.
இருவரும் தற்போது ஈரோடு கள்ளுக்கடை மேடு வீதியில் வசித்து வருகின்றனர். இன்று விஜய் வழக்கம் போல வேலைக்கு அழைத்து செல்ல மனைவியை இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அப்போது காரில் வந்த அர்ச்சனாவின் தந்தை செல்வம், அவர் மனைவி கவிதா மற்றும் நான்கு பேர் திடீரென காரில் இருந்து இறங்கி விஜயை தகாத வார்த்தையால் திட்டி, அர்ச்சனாவை காரில் வலுகட்டாயமாக ஏற்றி கடத்தி கொண்டு சென்றனர்.
இதையடுத்து தன் மனைவியை மீட்டு தர வேண்டும், காரில் மனைவியை கடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் தெற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுதது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பர்கூரில் அர்ச்சனாவை கடத்தி செல்வது தெரியவந்தது.
போலீசார் சென்று நாமக்கல் கொக்கராயன் பேட்டை தேவனாம்பாளையம் கரும்பு வெட்டும் தொழிலாளியான செல்வம் (வயது 45), அவர் மனைவி கவிதா (வயது 42), பவானி ஒலகடம் தாசனுாரை சேர்ந்த லாரி டிரைவரான பெரியப்பா பழனிச்சாமி (வயது 45), அந்தியூர் பச்சாம்பாளையம் பள்ளிபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கட்டட தொழிலாளி கருமலையான் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் (வயது 46) மற்றும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 35) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.