காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது குற்றம் ஆகாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்து உள்ளார்.
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். இவ்வாறு அப்பெண் அளித்த புகாரில், “காதலிக்கும் போது இளைஞர் தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக” அந்தப் பெண் குறிப்பிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில், அந்த இளைஞர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தன் மீது அப்பெண் அளித்த வழக்கை ரத்து செய்யக் கோரி, அந்த இளைஞர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும், காதலிப்பவர்கள் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 354 ஏ பிரிவின் கீழ் குற்றமாக அமையாது.
எனவே, அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்கிறேன். மேலும், இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கும் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ப்ரோமோஷனும் வேணும், பொண்ணும் வேனும்.. புதரில் கிடந்த சிறுவன்.. திருப்பூரை அலறவிட்ட சம்பவம்!
முன்னதாக, சிறார் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் ஆகாது என ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பு, உச்ச நீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.