தமிழகம்

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள சாலையோரமாக (அப்பாச்சி) இருசக்கர வாகனத்தில் வந்த 27 வயது ஆண் மற்றும் 24 வயது பெண் வாகனத்தை நிறுத்திவிட்டு கட்டி அணைத்தவாறு தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே தண்டவாளத்தில் அருகே தலை துண்டான நிலையில் ஒரு காதல் ஜோடி இருப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிதறி கிடந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படியுங்க: ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர்கள் இருவரும் கணவன் மனைவியா இல்லை வேறு ஏதேனும் தொடர்பு உள்ளவர்களா அல்லது திருமணம் ஆகி குழந்தை இல்லாததால் தற்கொலைக்கு முயன்றார்களான என கோணத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்தவர்கள் லத்தேரி அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (27) இவர் டைல்ஸ் போடும் வேலை செய்து வருகிறார். கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த கோகிலா (24). இரண்டாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.

மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்த்து வருகிறார். இந்நிலையில் மாற்று சமுகத்தை சேர்ந்த இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இது குறித்து பெண் வீட்டார் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு வரும்படி இருவரை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இன்று காலை இருசக்கர வாகனத்தில் கடலூர் செல்வதாக கூறி சென்றவர்கள் தங்களை பிரித்துவிடுவார்கள் என பயந்து கட்டி அணைத்தவாறு ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது .

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.