திருப்பூர் : பல்லடம் அருகே 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியிலிருந்து பல்லடத்திற்கு மணவரை அலங்கார வேலை பார்க்கும் டேவிட்ராஜ், வெள்ளிமலை, சுரேஷ், ஓட்டுநர் மூர்த்தி ஆகியோர் காரில் இன்று மாலை வந்தனர்.
இந்நிலையில் உடுமலையிலிருந்து கோவை நோக்கி சொகுசு காரில் உடுமலையை சேர்ந்த மணி (வயது 55) மற்றும் அவரது மனைவி மீனாட்சி (வயது 51) மற்றும் அவரது மகள் கிருத்திகா மற்றும் கிருத்திகாவின் 2 வயது குழந்தை மகிழன் சென்றனர்.
இரண்டு கார்களும் பல்லடம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரும்பாளி பகுதியில் நேருக்குநேர் நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூர்த்தி என்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அனைவரையும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.