தமிழகம்

சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் ஆணை!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கின் FIR கசிந்தது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனையடுத்து, தமிழக அரசு, பல்கலைக்கழகம் தரப்பில் பதிலளிக்க நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல் தகவல் அறிக்கையை போலீசார் கசியவிடவில்லை என அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு, “அப்படியென்றால் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து 14 பேர் பார்த்தார்கள், அவர்களிடம் விசாரிக்கிறோம் என சொல்கிறீர்களே? FIR கசியாமலா விசாரிப்பதாக சொல்கிறீர்கள்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரன், “துரதிருஷ்டவசமான இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. 189 ஏக்கர் பரப்பில் உள்ள பல்கலைக்கழக வளாத்திற்கு மொத்தம் 8 வழிகள் உள்ளன.

இந்த அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் மொத்தம் 988 கேமராக்கள் உள்ளன. அவற்றில் 849 கேமராக்கள் செயல்படுகின்றன, மற்றவை செயல்படவில்லை. மாதந்தோறும் கேமராக்கள் செயல்படுகிறதா என சோதனை செய்யப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்குப் பின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த போலீஸ் விசாரணைக்கு, அண்ணா பல்கலைக்கழகம் முழு ஒத்துழைப்பு வழங்குகிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், “மாணவி அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… 2025ஆம் ஆண்டு ரெண்டு பரிசு காத்திருக்கு!

மாணவியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும். மாணவியின் அடையாளத்தை FIR-இல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், எஃப்ஐஆரில் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.

எனவே, சென்னை காவல்துறை ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR வெளியாவது புகார் அளித்தவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பை தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.