பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இதனையடுத்து, தமிழக அரசை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில், இன்று தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அம்மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், “பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை எஃப்ஐஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. முதல் தகவல் அறிக்கையில் உள்ள வார்த்தைகளும் கண்ணியத்துடனே இருக்க வேண்டும். FIR-ல் மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. FIR வெளியாவது புகார் அளித்தவரின் சுதந்திரத்தைப் பறிக்கும்.
இதையும் படிங்க: ஆன்லைனில் வாங்கிய கடன்.. தவணை செலுத்தாத பெண்ணை மார்பிங் செய்து மிரட்டிய இருவர் கைது!
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த மாணவி படிப்பைத் தொடர அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அவரிடம் எந்த தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. புாதிக்கப்பட்ட மாணவி தொடர்ந்து படிப்பை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை டிஜிபி அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.