தமிழகம்

படத்திற்கு தடை கோருவது ஃபேஷன் ஆகிவிட்டது.. ஐகோர்ட் கிளை தடாலடி!

ஒரு திரைப்படத்திற்கு தடை கோருவது தற்போது ஃபேஷனாகி விட்டதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்து உள்ளது.

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு, இன்று வழக்கறிஞர் கார்த்திக் இன்று ஆஜரானார். அப்போது, அவர், “ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ என்ற திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.

படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி தவறாகச் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பின்பற்றக் கூடியவர்கள் அவமதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கோரினார்.

இதனையடுத்து நீதிபதிகள், “மாநிலம் முழுவதும் வெளியாகும் திரைப்படத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு எவ்வாறு தடை விதிக்க முடியும்? அது மட்டுமல்லாமல், இப்போது இது ஒரு ஃபேஷனாக மாறியுள்ளது. ஒரு படத்தை எடுப்பது, அதை தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்து படத்தை பிரபலமாக்குவது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு திரைப்படம் என்பது மிகவும் சிரமப்பட்டு, அதிகம் செலவிட்டு எடுக்கப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படக்கூடியத் திரைப்படங்களுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல. வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு மனுதாரருக்கு தெரியுமா?

இதையும் படிங்க: பழனி அடிவாரத்தில் கிடந்த பெண் சடலம்.. பகீர் கிளப்பிய உல்லாசக் கதை!

அப்படி தெரிந்தால்தான், அதில் எது தவறு? எது சரி? என்ற முடிவுக்கு வர முடியும். அவ்வாறு தெரியாத பட்சத்தில், எவ்வாறு திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியும்? ஒரு திரைப்படத்தில் சில கருத்துக்கள் வந்தாலும், அந்த கருத்தை சர்ச்சையாக்குவதால் அதிகமானவர் அதைப் பார்க்கக் கூடிய சூழலும் ஏற்படுகிறது.

திரைப்படத்தை பொழுதுபோக்காக விட்டுவிட்டால், அது யாருக்கும் தெரியாமலே போய்விடும். மேலும், இந்த நீதிமன்றத்திற்கு நாடு முழுவதும் தடை விதிப்பதற்கு எப்படி அதிகாரம் இருக்கிறது? எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது“ எனக் கூறி உத்தரவிட்டனர்.

Hariharasudhan R

Recent Posts

ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…

24 minutes ago

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

15 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

This website uses cookies.