தமிழகம்

மதுபானக் கடைகளில் ஸ்டாலின் படம் வேண்டும்.. மதுரை பாஜக நூதன முறையில் மனு!

அரசு மதுபானக் கடைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெறக் கோரி மதுரை பாஜகவினர் ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளனர்.

மதுரை: தமிழக அரசு நடத்துகின்ற அரசு மதுபானக் கடைகளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நூதன முறையில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் பிரச்சார பிரிவு மதுரை மாவட்ட பார்வையாளர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “தமிழகத்தில் அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் 318 கடைகள் பாதியாக குறைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள். ஆனால், தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் என பேசினார். தற்போது கடந்த நான்கு ஆண்டுகளில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என நினைக்கிறேன்.

எங்களுக்கு தேவை பூரண மதுவிலக்கு. இது வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எனவே, தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் முதல்வர் புகைப்படம் இடம்பெற வேண்டும். கூட்டுறவு மருந்து கடைகள், அரசு அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள் என அனைத்திலும் முதல்வர் படம் உள்ள நிலையில், தமிழக அரசு நடத்துகின்ற மதுபானக் கடைகளில் ஏன் முதல்வர் புகைப்படம் வைக்க கூடாது என மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: திமுக அனுதாபிக்கே அப்படினா.. நிர்வாகிக்கு? கிழித்தெடுத்த வானதி சீனிவாசன்!

அதன் விளைவாகவே, தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, முதல்வர் புகைப்படத்துடன் மனு அளிக்க வந்ததாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.