மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பபாசி ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது.
11நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவில் வெ.இறையன்பு, சு.வெங்கடேசன், மதுக்கூர் இராமலிங்கம், இந்திரா சௌந்தரராஜன், கு.ஞானசம்பந்தன், ஐ.லியோனி, மனுஷ்ய புத்திரன், நந்தலாலா, பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்நிலையில் 14ம் தேதி மாலை நேர நிகழ்வாக பேச்சாளர் பர்வின் சுல்தானா அவரைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நகைக்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் பெயர் மற்றும் வரவேற்பு பேனர்கள் புத்தகத்திருவிழாவில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் விருந்தினர் அழைப்பில் சர்ச்சை ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்வது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், புத்தகத்திருவிழாவில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் ராமர் படம் மறைக்கப்பட்டும், அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகைச்சுவை நடிகர் ராமர் புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
This website uses cookies.