மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பபாசி ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் கடந்த 6ம் தேதி தொடங்கியது.
11நாட்கள் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவில் வெ.இறையன்பு, சு.வெங்கடேசன், மதுக்கூர் இராமலிங்கம், இந்திரா சௌந்தரராஜன், கு.ஞானசம்பந்தன், ஐ.லியோனி, மனுஷ்ய புத்திரன், நந்தலாலா, பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
இந்நிலையில் 14ம் தேதி மாலை நேர நிகழ்வாக பேச்சாளர் பர்வின் சுல்தானா அவரைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நகைக்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்வதாக அழைப்பிதழில் பெயர் மற்றும் வரவேற்பு பேனர்கள் புத்தகத்திருவிழாவில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் விருந்தினர் அழைப்பில் சர்ச்சை ஏற்பட்டு நகைச்சுவை நடிகர் ராமர் கலந்து கொள்வது குறித்து சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், புத்தகத்திருவிழாவில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் ராமர் படம் மறைக்கப்பட்டும், அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகைச்சுவை நடிகர் ராமர் புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.