மதுரை மாமன்ற கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் குவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, மதுரை மாநகராட்சி பகுதியில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டத்திற்கு வரக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பலத்த சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
மாநகராட்சி முழுவதிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான நிலை காணப்படுகிறது. மாநகராட்சி மேயர் இந்திராணி நிதியமைச்சரின் ஆதரவாளர் என்பதால், மாவட்ட செயலாளர் கோ தளபதி மற்றும் அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளர்கள் தங்களது பகுதிகளுக்கு எந்தப் பணிகளையும் மேயர் மேற்கொள்ளவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.