மதுரை மாமன்ற கூட்டத்தில் திமுக உட்கட்சி பூசல் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு காவல்துறையினர் குவிப்பால் பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, மதுரை மாநகராட்சி பகுதியில் காவல்துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கூட்டத்திற்கு வரக்கூடிய மாமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் பலத்த சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாமன்ற உறுப்பினர்களின் செல்போன்கள் வாங்கி வைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
மாநகராட்சி முழுவதிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான நிலை காணப்படுகிறது. மாநகராட்சி மேயர் இந்திராணி நிதியமைச்சரின் ஆதரவாளர் என்பதால், மாவட்ட செயலாளர் கோ தளபதி மற்றும் அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவாளர்கள் தங்களது பகுதிகளுக்கு எந்தப் பணிகளையும் மேயர் மேற்கொள்ளவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.