மந்த கதியில் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றியதால் நெடுந்தூர போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கி தவித்தது சக வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசரடி நீரேற்றம் நிலையம் அருகாமையில் குடிநீர் விநியோக செய்யும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தார் சாலையில் இருந்து நீரூற்றாக குடிநீர் வீணாகி கொண்டிருந்தது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள், சாலையில் பெரிய பள்ளம் தோண்டி குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக உடைப்பை சரி செய்த பின்னர் பள்ளத்தை முறையாக பாதுகாப்பாக மூடி செல்லாமல் அரைகுறையாக மணலை கொண்டு மூடி சென்றனர். இதனை அறிந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்களிடம், இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை முறையாகவும், பாதுகாப்பாகவும் மூட அறிவுறுத்தினர். ஆனால், காதில் வாங்காமல் மணலை கொட்டி செல்ல முயன்றவ அவர்களை, காவலர்கள் எச்சரித்து சாலையை சீர்படுத்த உத்தரவிட்டனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த மாநகராட்சி ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பள்ளத்தை சீர் செய்வதற்கான பணியை துவங்கினர்.
இந்த நிலையில், சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக மந்த கதியில் மாநகரின் முக்கிய சாலையில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியை அலட்சியமாக செய்து வந்ததால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் மறு மார்க்கத்தில் செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் நெடுந்தூரம் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர். மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவைக்கான வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் தவித்து பெரும் சிரமத்திற்கு ஆளாகின.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.