தமிழகம்

சென்னையை விட மதுரையில் தாறுமாறு வரி.. மதுரை கம்யூ., கட்சி துணை மேயர் திடீர் அதிருப்தி!!

மதுரை மாநகராட்சியின் 32 வது மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியுள்ளது, இக்கூட்டத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மதுரை துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 10 ஏக்கர் பரப்பளவில் 2 கட்டமாக டைடல் பூங்கா அமைக்கப்படும்” என அறிவித்தார்.

Phase 1 டைடல் பூங்கா அமைக்க 5.60 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி வழங்கியது, தற்போது டைடல் பூங்கா நிறுவனம் Phase 1 டைடல் பூங்கா அமைக்க கூடுதல் நிலம் கேட்டு கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் கூடுதலாக 4 எக்கர் நிலம் என மொத்தமாக 9.60 ஏக்கர் நிலம் வழங்கி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் பேசுகையில், பந்தல்குடி கால்வாயை முன்கூட்டியே தூர்வார இருக்க வேண்டும் நாம் கவன குறைவாக இருந்து விட்டோம்.

செல்லூர் கான்மாய் நிரம்பி வழிவதை வைகை ஆற்றுக்குள் கூடுதலாக ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும், 18 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி புதர் மண்டி கிடக்கின்றது.

மாநகராட்சி நிதி பற்றாக்குறை நெருக்கடி அதிகமாக உள்ளது, மாநகராட்சியில் 46 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்து வரி பாக்கி உள்ளது, இதில் மத்திய அரசு நிறுவனங்கள் 8 கோடி ரூபாய்க்கு மேலாக பாக்கி வைத்துள்ளார்கள்.

சொத்துக்கள் ஏலம் விடும் நடைமுறை கைவிடப்பட்டதால் சொத்து வரி நிலுவையில் உள்ளது, மாநகராட்சி வாரச் சந்தைகளால் கிடைக்கும் வருவாய் 10 இல் 1 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. சென்னையை விட மதுரையில் மட்டுமே குப்பை வரி அதிகமாக வசூல் செய்யப்படுகிறது” என பேசினார்.

துணை மேயர் பேசி கொண்டிருக்கும் போதே துணை மேயரின் பேச்சை நிறுத்துமாறு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குறுக்கீடு செய்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் துணை மேயர் தங்களுடைய கருத்துகளை பேச வேண்டும் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.

இதற்கு பதிலளித்த துணை மேயர் நாகராஜன் “மாநகராட்சியில் ஆலோசனை கூட்டத்திற்கு என்னை அழைப்பதில்லை, என்னை அனுமதித்தால் தானே மக்கள் பிரச்சினைகளை பேச முடியும்” என கூறினார்,

இதனையடுத்து துணை மேயர் நாகராஜன் தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டார். மதுரை மாநகராட்சி 77 வார்டு மாமன்ற உறுப்பினர் மாயத்தேவன் பேசுகையில் “பாதாள சாக்கடை அமைப்புகளை நீக்க பயன்படுத்தப்படும் சூப்பர் சக்கரா வாகனம் வி.ஐ.பி வார்டுகளுக்கு மட்டும் செல்லுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் பேசுகையில் “மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் வி.ஐ.பி வார்டுகள் தான், பணிகளின் முக்கியத்துவம் கருதி பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

இதையும் படியுங்க: விஜய் மாநாட்டுக்கு வருபவர்கள் இப்படியெல்லாம் வரக்கூடாது : மின்வாரியத்துறை கண்டிஷன்..!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கூறுகையில் “மதுரையில் உள்ள பாசன கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதினேன், கடிதம் எழுதி 6 மாதங்கள் ஆகியும் பொதுப்பணித்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாசன கால்வாய்களை வைகை ஆற்றுடன் இணைக்க திட்டம் கொண்டு வரப்பட வேண்டும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகாலை தூர் வார வேண்டும், மழை பாதிப்புகளில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

மழை காலங்களுக்கு முன்னதாக மழைநீர் வடிகால் தூர்வாரவில்லை, கூட்டணி என்பது வேறு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் குணம் என்பது வேறு, மாநகராட்சிக்கு வர வேண்டிய வரிகளை வசூல் செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வரி தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும், வரி வசூல் செய்வதிலும் மாநகராட்சி தொய்வாக செயல்படுகிறது.

மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்து உள்ளவர்கள் குறித்த விபரங்களை அறிக்கையாக வெளியீட வேண்டும்” என கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

31 minutes ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

1 hour ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

4 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

4 hours ago

This website uses cookies.