தமிழகம்

அது விதிகளின் படி நடந்தது.. இன்பநிதி விவகாரத்தில் மதுரை ஆட்சியர் விளக்கம்!

துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதியின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரின் இருக்கை மாற்றப்பட்டதாக வெளியான வீடியோவுக்கு ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டு, ஜல்லிக்கட்டு வீரர்கள் களத்துக்கு வந்தனர்.

தொடர்ந்து, பாரம்பரிய வழக்கப்படி கோயில் காளைகளுக்கு மரியாதை அளிக்கப்பட்ட பின்பு, ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. மேலும், இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின் போது இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையில் இருந்து மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இந்தச் சம்பவம் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் இடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், “துணை முதலமைச்சர் இருக்கையில் இருந்து எழுந்து நிற்கும்போது, விதிகளின் படியே மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் நானும் எழுந்து நின்றேன். மாறாக, சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் திரித்துச் சொல்லப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026 ஆம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.