மதுரையில் 10ம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த பெண் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை எச்.எம்.எஸ் காலனி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி. இவர் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் பல்வேறு நோய்களுக்கு பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த ரேகாதேவி என்பவர் மதுரை மாவட்ட சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளர் பாலசெந்தில் ஆகியோர் யோக மீனாட்சி வீட்டிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதில், மருத்துவமே படிக்காமல் வெறும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினருக்கு மருத்துவ இணைய இயக்குனர் தகவல் அளித்ததின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர் யோக சரஸ்வதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இவருடன் உதவியாளராக இருந்த சரஸ்வதி மற்ற பணியாட்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்..
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.