மதுரையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த கண் தெரியாத பாடகரை தீயணைப்பு துறையினர் கயிறை கட்டி மீட்டனர்.
கடந்த ஒரு மாத காலமாக வாட்டி வந்த நிலையில், தற்போது ஓரிரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாத பொதுமக்கள் தற்போது பெய்து வரும் மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் எந்த ஒரு முன்னேற்பாடுகளும் இல்லாத மதுரை மாவட்ட நிர்வாகத்தினால், ஒரு மணி நேரம் பெய்த மழைக்கே மதுரை தாங்கவில்லை என்று கூறலாம்.
மேலும் படிக்க: 100 சதவீதம் விதிமீறல்… போனா திரும்ப வருமா…? இத்தனை நடந்தும் ஆழ்ந்த உறக்கத்தில் திமுக அரசு… அதிமுக கடும் கண்டனம்
அந்த அளவிற்கு மழை நீர் வெளியே செல்ல முடியாமல் சாலையில் தேங்கிய நிலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை ராஜா மில் ரோடு கருடர் பாலம் வழியாக சென்ற இன்னிசை கச்சேரி குழுவினர் ஐந்து நபர்கள் நாமக்கல் மற்றும் மதுரை சார்ந்தவர்கள் அவ்வழியாக சென்ற போது அங்கே தேங்கிருந்த தண்ணீரில் மாட்டிக் கொண்டனர்.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மழை நீரில் சிக்கிக் கொண்ட அந்த வாகனத்தை கயிற்றால் கட்டி இழுத்தனர்.
மழை நீரில் சிக்கிக் கொண்ட அந்த ஐந்து பேரை மீட்டனர். அந்த வாகனத்தின் ஓட்டுனர் நாகேந்திரன், அப்துல்லா, மாரியப்பன், அம்பிகா மற்றும் விக்னேஷ் ஆகிய ஐந்து பேரை மீட்டனர்.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.