அங்காடித்தெரு பாணியில் மலர்ந்த தகாத காதல்… லாட்ஜில் ரூம் எடுத்த ஜோடி ; போலீஸுக்கு வந்த திடீர் அழைப்பு…!!
மதுரை அருகே பெற்றோர் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பவர் திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவியை பிரிந்த நிலையில், மாட்டுத்தாவனி அருகே உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த அரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி (25) என்பவர் தனது கணவனை பிரிந்து ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையுடனும் வாழ்ந்து வரும் நிலையில், இவரும் அதே கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒரே தளத்தில் இருவரும் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் ஜவுளிகடைக்கான பணியாளர்கள் தங்கும் விடுதியில் தங்கிவந்தாலும் கூட, அவ்வப்போது மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பிரஸ் காலனி பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அடிக்கடி அறை எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இதுபோன்று நேற்று மதியமும் அறையெடுத்து இருவரும் தங்கியுள்ள நிலையில், இன்று காலை அறையிலிருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு விடுதியின் மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். புதூர் காவல்துறையினர் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து பார்த்த போது இருவரும் விஷம் அருந்தி சடலமாக கிடந்தனர்.
இதனையடுத்து, இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இருவரின் கள்ளக்காதல் ரஞ்சனியின் வீட்டாருக்கு தெரியவர இரண்டு குழந்தைகள் உள்ளது. இது வேண்டாம், அசிங்கம் என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த ரஞ்சனி கள்ளக்காதலர் கார்த்திகேயனுடன் விஷமருந்தி தற்கொலை செய்தது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.