Categories: தமிழகம்

அட, இவ்வளவு சீக்கிரமா-வா…? மதுரையில் மெட்ரோ ரயில் எப்போது இயங்கும் தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான அறிக்கை ஜூன் மாதம் முடிக்கப்பட்டு, 2024ம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் துவங்கும் என மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சித்திக் தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31.30 கிலோ மீட்டர் தொலைவுக்கு 18 நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த திட்டத்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில் இன்று நடைபெற்றது.

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜூனன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் பதம்னாபன் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் சார்பிலான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் நிர்வாக இயக்குனர் சித்திக் பேசுகையில், “100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும். நிலம் இருக்கிறது என்பதற்காக அங்கு நிலையம் அமைக்காமல், மக்களின் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் அமைக்க வேண்டும்.

ரயில்வே நிலையம் – பெரியார் பேருந்து நிலையம் – மீனாட்சி அம்மன் கோவில் மூன்றையும் இணைக்கும் வகையில் ஒரு நிலையம் அமைக்கப்பட வேண்டும். விமான நிலையத்தை இணைக்கும் இடையே வழித்தட திட்டம் இப்போதைக்கு இல்லை. இரண்டாம் கட்ட வழித்தடத்தில் இருக்கும்,” என்றார்

பின்னர் இயக்குநர் சித்திக் அளித்த பேட்டியில், “மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து பணிகளை துரிதப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. மதுரை தொன்மையான ஊர் என்பதால் இங்கு நகர் பகுதிக்குள் அமையும் வழித்தடம் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை வடிவில் அமைக்கப்பட உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை முன்வைத்து கோரிப்பாளையம் முதல் வசந்த நகர் வரையிலான வழித்தடம் வைகை ஆற்றுக்கு கீழே சுரங்கப்பாதையில் அமையும்.

திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கிமீ வழித்தடத்தில், 26 கிமீ மேம்பாலமாகவும், 5 கிமீ பூமிக்கு அடியிலும் கட்டமைக்கப்பட்ட உள்ளது. மொத்தம் 18 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூன் மாதத்திற்குள் முடித்து அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும். 2024ம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மத்திய – மாநில அரசுகள் 20% + 20% நிதியும், நிதி நிறுவனங்கள் 60% நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 3 பெட்டிகளுடன், 5 முதல் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்,” என கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

20 minutes ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

43 minutes ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

2 hours ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

2 hours ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

2 hours ago

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

18 hours ago

This website uses cookies.