மதுரை ; சோழவந்தான் அருகே தாய் மற்றும் மகனை பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோழவந்தான் காடுபட்டி அருகே வசித்து வருபவர் உமா. இவரும், இவரது மகன் செல்லப்பாண்டியும் அவர்களது வீட்டின் முன் சத்தமிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இது பக்கத்து வீட்டில் வசித்து வரும் வாலிபரான செந்தில் குமார் என்பவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏன் வீட்டின் முன் சத்தமாக பேசுகிறீர்கள்..? எனக் கூறி தாய் – மகனிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்திமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் உமா, மகன் செல்லப்பாண்டி ஆகிய இருவரையும் சராமாரியாக கை, கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.
காயமடைந்த தாய் – மகனை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்த காடுபட்டி காவல் நிலைய போலீசார், தாய், மகனை வெட்டிவிட்டு தலைமறைவான செந்தில்குமரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது வீட்டின் முன்பு சத்தமாக பேசிக் கொண்டிருந்தவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.