மதுரை ; சோழவந்தான் அருகே தாய் மற்றும் மகனை பக்கத்து வீட்டுக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சோழவந்தான் காடுபட்டி அருகே வசித்து வருபவர் உமா. இவரும், இவரது மகன் செல்லப்பாண்டியும் அவர்களது வீட்டின் முன் சத்தமிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இது பக்கத்து வீட்டில் வசித்து வரும் வாலிபரான செந்தில் குமார் என்பவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏன் வீட்டின் முன் சத்தமாக பேசுகிறீர்கள்..? எனக் கூறி தாய் – மகனிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்திமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தாய் உமா, மகன் செல்லப்பாண்டி ஆகிய இருவரையும் சராமாரியாக கை, கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார்.
காயமடைந்த தாய் – மகனை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்த காடுபட்டி காவல் நிலைய போலீசார், தாய், மகனை வெட்டிவிட்டு தலைமறைவான செந்தில்குமரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது வீட்டின் முன்பு சத்தமாக பேசிக் கொண்டிருந்தவர்களை உயிருக்கு ஆபத்தான நிலையில் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.