மதுரை : உசிலம்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி என்பவரது மனைவி செல்லம்மாள். கணவர் சாமி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மகன், மகளும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், உசிலம்பட்டி வத்தலக்குண்டு நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி செல்லம்மாள், இரவு வழக்கம் போல் உறங்க சென்றார். இன்று காலை முதலே வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு, காவல் ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல் மற்றும் குற்றப்பிரிவு போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.