மதுரை : மதுரையில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் ஆண்டார் கொட்டாரம் அய்யனார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை பகுதியான ராணி மங்கம்மாள் சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததோடு, இரும்பு கதவு போட்டு சாலையை அடைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ராணி மங்கம்மாள் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராணி மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சாலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர், மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்களை கொடுத்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்டார் கொட்டாரம் பகுதியில் இருந்து கருப்பாயூரணி செல்லும் பிரதான சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தாசில்தார் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பாயூரணி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல் துணை காண்காணிப்பாளர் பிரியதர்சினி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கொடுத்த உறுதியின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.