மதுரை : மதுரையில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற பிரபல ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி மதுரை வளர்நகர் பகுதியில் பாலமுருகன் (எ) டோரா பாலா கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி வினோத்தை கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அடையாள அணிவகுப்புக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது, ரவுடி வினோத் போலீசாரை வெட்டி விட்டு தப்பி ஓட முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், சுதாரித்துக் கொண்ட மாட்டுத்தாவணி போலீசார், அரிவாளால் வெட்ட வந்த ரவுடி வினோத்தை துப்பாக்கியால் சுட்டனர். இதனால், காலில் குண்டு பாய்ந்த நிலையில், சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அரிவாளால் தாக்க முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.