மதுரையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து போடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓட்டுநர் பாலமுருகன் இயக்கிய இந்தப் பேருந்து, நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள அணு சாலையில் வரும் பொழுது 20 அடி பள்ளத்தில் கவிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குருசாமி, பிச்சை ஆகிய இரு முதியவர்கள் உயிரிழந்தனர்.
மேலும், பேருந்துக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த நாகமலை, புதுக்கோட்டை காவல்துறையினர், தப்பியோடி டிரைவர் மற்றும் நடத்துனரை தேடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.