மதுபானக்கடையில் எதிரே அமர்ந்து மது குடித்த நபரின் பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர்,, புத்தாண்டை கொண்டாடுவதற்காக பாண்டிகோவில் அருகேயுள்ள மதுபான கடை ஒன்றில் மதுகுடிக்க வந்துள்ளார். அப்போது தனது பைக்கை மதுபான கடையின் வெளியே நிறுத்திவைத்துவிட்டு அங்குள்ள மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவருடைய இருக்கைக்கு எதிராக அமர்ந்து மது அருந்திய இளைஞர் ஒருவர் கருப்பையாவுடன் நன்கு பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, திடீரென்று வெளியில் செல்வதாக புறப்பட்டுவிட்டார். இதனையடுத்து, கருப்பசாமி சிறிதுநேரம் கழித்து தான் வாகனத்தை நிறுத்திய இடத்தில் தேடியபோது வாகனம் காணாமல் போயிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமி சில நிமிடங்களில் மதுபானக்கடையில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது, தனது எதிரில் மது அருந்திகொண்டிருந்த இளைஞர் பைக்கை எடுத்துசெல்வது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் இளைஞர் கருப்பசாமி புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினர் இதுவரை புகார் ஏற்கவில்லை. இந்த நிலையில் பைக் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளங்களை வெளியிட்டு தனது பைக்கை தேடிவருகிறார் கருப்பையா.
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச்…
தனியார் அறக்கட்டளை சார்பில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில்…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாளை (ஜுன் 22) மதுரையில் அமைந்துள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…
This website uses cookies.