சித்திரை திருவிழாவிற்கு முன்பு கள்ளழகர் இறங்கும் இடத்தில் வழிந்து ஓடும் கழிவுநீருக்கு தீர்வு கிடைக்குமா? என்று பக்தர்களின் ஏக்கமாக உருவாகியுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நேரத்தில் மட்டுமே இப்பகுதியில் கழிவு நீர் வருவது தடுத்து நிறுத்தப்படும். திருவிழா முடிந்த பிறகு மீண்டும் கழிவு நீர் அழகர் இறங்கிய அதே இடத்தில் திருப்பி விடப்படும்.
இந்த ஆண்டாவது நிரந்தரமாக கழிவு நீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் ஒன்று கூடி இருப்பார்கள். குறிப்பிட்ட அந்த இடத்தில் மதுரையின் பிரதான கழிவு நீர் கால்வாய் வழியே அங்கே கழிவு நீர் திறந்து விடப்படுவதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே, நிரந்தரமாக வைகை ஆற்றின் புனிதத்தை போற்றும் வகையில், வைகை ஆற்றில் கழிவுநீர் கழிப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்கும் பொழுது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.