கண்டா வர சொல்லுங்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக வண்டியூர் பகுதியில் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை வண்டியூர் பகுதியில் கண்டா வரச் சொல்லுங்க…! என்ற வாசகத்துடன் வண்டியூர் , சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில் மதுரை பாராளுமன்ற தொகுதியில், இரண்டு முறை எம்.பி யாக வெற்றி பெற்றும், வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி
திரு. சு.வெங்கடேசன் அவர்களே! உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, இதுவரை நீங்கள் செய்தது என்ன? இப்படிக்கு
வண்டியூர் கிராம பொதுமக்கள் என அச்சிடப்பட்டு வண்டியூர் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை வண்டியூர் பகுதிகளில் தற்போது சாலைகள் சேதமடைந்து பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு வரவில்லை எனக்கொரு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசுக்கு எதிராக இலவச பட்டா கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 3000 க்கும் மேற்பட்ட பெண்களை பேரணியாக அழைத்து வந்து மனு அளித்த நிலையில் சு.வெங்கடேசனுக்கு எதிராக திடீரென கண்டா்வரச்சொல்லுங்க என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே உள்ள கருத்து மோதலை வெளிப்படுத்துகிறதா? என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
பொதுமக்கள் பெயரில் நோட்டீஸ் ஒட்டியது திமுகவினரா? என்ற சந்தேகத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.