கண்டா வர சொல்லுங்க மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக வண்டியூர் பகுதியில் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை வண்டியூர் பகுதியில் கண்டா வரச் சொல்லுங்க…! என்ற வாசகத்துடன் வண்டியூர் , சௌராஷ்டிராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில் மதுரை பாராளுமன்ற தொகுதியில், இரண்டு முறை எம்.பி யாக வெற்றி பெற்றும், வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல வராத மதுரை எம்.பி
திரு. சு.வெங்கடேசன் அவர்களே! உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு, இதுவரை நீங்கள் செய்தது என்ன? இப்படிக்கு
வண்டியூர் கிராம பொதுமக்கள் என அச்சிடப்பட்டு வண்டியூர் பகுதி முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை வண்டியூர் பகுதிகளில் தற்போது சாலைகள் சேதமடைந்து பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கள் பகுதிக்கு வரவில்லை எனக்கொரு நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசுக்கு எதிராக இலவச பட்டா கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 3000 க்கும் மேற்பட்ட பெண்களை பேரணியாக அழைத்து வந்து மனு அளித்த நிலையில் சு.வெங்கடேசனுக்கு எதிராக திடீரென கண்டா்வரச்சொல்லுங்க என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே உள்ள கருத்து மோதலை வெளிப்படுத்துகிறதா? என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது
பொதுமக்கள் பெயரில் நோட்டீஸ் ஒட்டியது திமுகவினரா? என்ற சந்தேகத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.