மதுரை மாநகர் வைகை கரையோர சாலையில் மீண்டும் பைக்கில் வீலிங் செய்து இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய வைகை கரையோர சாலை மற்றும் நத்தம் மேம்பாலம் பகுதியில் அவ்வபோது இளைஞர்கள் பைக் ரேஸ் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், இதை தவிர்க்கும் வகையில் மாநகர காவல் துறை சார்பாக நத்தம் மேம்பாலம் மற்றும் வைகை கரையோர சாலை பகுதியில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்த காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரை மாநகர் தெப்பக்குளம் முதல் ஐராவதநல்லூர் வரை உள்ள வைகை கரையோர சாலை பகுதியில் வாலிபர்கள் சிலர் பைக்கில் அதிக வேகமாக சென்று, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், லுங்கி அணிந்தபடி சினிமா பாடலுக்கு இருசக்கர வாகனத்தில் நின்றபடி நடனமாடிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.