தமிழகம்

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை சேர்ந்த லூயிஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

லூயிஸ் குண்டக்கல்லுவில் கால் சென்டர் நடத்தி வருகிறார். அவர்கள் மூவரும் சேர்ந்து எளிதாக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி பெண்களின் வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களுக்கு விற்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்தனர்.

இதற்காக அப்பாவிப் பெண்களைப் தேடி பிடிக்கத் தொடங்கினர். மேலும் கால் சென்டருக்கு வரும் பெண்களை ஏமாற்றும் வார்த்தைகளால் கணேஷும், ஜோஸ்னாவும் பேசி பெங்களூரில் பெண்களைப் பிடிப்பது வழக்கம்.

பின்னர் குந்தக்கல்லியில் ஒரு ஸ்டுடியோவை வைத்து தங்கள் வலையில் விழுந்த பெண்களுடன் நிர்வாண வீடியோக்களை எடுப்பார்கள். இந்த வீடியோக்களை சைப்ரஸை தளமாகக் கொண்ட Xampster என்ற ஆபாச வலைத்தளத்துடன் இணைந்தனர்.

இந்த ஆபாச தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் URL இணைப்புகள் வழியாக பெண்களின் நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களுக்கு அனுப்பி வந்தனர். அவர்கள் இந்த வலைத்தளத்தில் லைவ் வீடியோக்களையும் வெளியிட்டனர்.

பெண்களின் நிர்வாண வீடியோக்களையும் லைவ் நிர்வாண வீடியோக்களையும் பதிவேற்றி நிறைய பணம் சம்பாதித்து வந்தனர். இவர்கள் குறித்து கிடைத்த தகவலால் சைபர் பாதுகாப்பு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து ஆந்திர மாநில அரசு சைபர் குற்றங்கள், போதை பொருட்கள் கடத்தல் மீது தனி கவனம் செலுத்தி வரும் கருடா தனிப்படை ஐ.ஜி. ரவிகிருஷ்ணா தலைமையிலான போலீசார் குந்தக்கல்லில் இருந்து கால் செண்டர் என்ற பெயரில் பணத்திற்காக பெண்களை ஏமாற்றி, அவர்களின் நிர்வாண வீடியோக்களை லைவ் ஒளிபரப்ப செய்ய ஸ்டுடியோவை அமைத்து செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஏற்கனவே Xampster ஆபாச வலைத்தளத்தில் பல வீடியோக்களையும் பெண்களுடன் லைவ் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டுள்ளது கண்டுபிடித்தனர். போலீஸ் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட கணேஷ், ஜோஸ்னா மற்றும் லூயிஸ் ஆகியோர் தடைசெய்யப்பட்ட ஆபாச வலைத்தளத்தில்
பெண்களில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்ததாக தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கணேஷ் மற்றும் ஜோஸ்னா ஆகியோர் ஆபாச வீடியோக்கள் மூலம் ₹ 16 லட்சமும், லூயிஸ் ₹ 11 லட்சமும் சம்பாதித்ததை சைபர் பாதுகாப்பு போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்தப் பணம் கிரிப்டோகரன்சியாக வரும். இந்தப் பணம் சைப்ரஸை தளமாகக் கொண்ட டெக்னோயிஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் இவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

பெண்களின் நிர்வாண வீடியோக்களையும், பெண்களுடன் நிர்வாண லைவ் நிகழ்ச்சிகளையும் ஆபாச வலைத்தளங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் அதிகமாக சம்பாதித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அதுகுறித்தும் கூடுதலாக, இந்த கும்பலிடம் எத்தனை பெண்களை சிக்க வைத்து நிர்வாண வீடியோக்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளது என்பதைக் கண்டறியும் பணியில் கருடா தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதற்காகவே சைபர் கிரைம் குழுக்களை வலுப்படுத்துகிறோம் . சைபர் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உள்ளது.

மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டும். சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு ஐ.ஜி.ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.