ஆட்சியர் அலுவலகத்துக்கு கொலுசுடன் வந்த மநீம கட்சியினர்: திமுக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்..!!

கோவை: கோவையில் வாக்காளர்களுக்கு திமுக கொடுத்த கொலுசு மற்றும் டோக்கனுடன் வந்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் நேற்று பிரச்சாரங்களை நிறைவு செய்தனர். இந்நிலையில் திமுகவினர் ஓட்டுக்கு பணம், பொருள், அன்பளிப்பு ஆகியவை கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுத்ததாக மக்கள் நீதி மய்யதினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொலுசுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு புகார் தெரிவித்தனர். மேலும் திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன்களை வழங்கி பணத்தை பெற்றுக் கொள்ள அழைப்பதாகவும், எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாக வழங்குகின்றனர் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர் தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமெனவும், இல்லையென்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

21 minutes ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

23 minutes ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

42 minutes ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

2 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

2 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

3 hours ago

This website uses cookies.